துருவங்கள் பதினாறு என்கிற தனது முதல் படம் மூலமாக தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. அதனாலேயே அடுத்ததாக இவர் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது.
அத்துடன் இதில் இடம்பெற்றுள்ள நட்சத்திர கூட்டணியும் பிரமிப்பை உருவாக்கவே செய்திருக்கிறது. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் ஆகியோர் நடிக்க. ஸ்ரேயா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது இந்தப்படம் ஆக-31ல் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.