ஒருபக்கம் ‘பூஜை’ வில்லன் முகேஷ் திவாரி.. இன்னொரு பக்கம் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத் லோகித்சுவா.. விஷால் தனித்தனியாக இரண்டு படங்களில் சமாளித்த இந்த இரண்டு வில்லன்களையும் ஒரே ஆளாக சமாளிக்கவேண்டிய பொறுப்பை ‘நான் ஈ’ சுதீப்பிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்..
படத்திற்கு டைட்டிலும் ‘முடிஞ்சா இவன புடி’ என கெத்தாக வைத்துள்ளார். சுதீப் ஹீரோவாக நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் இது. கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின்றன. ஜூலை மாதத்தில் படத்தையே ரிலீஸ் பண்ண முடிவுசெய்துள்ளார்கள்.