அஞ்சான் படத்தில் பார்த்திபன், பிரம்மானந்தம், ஜெயராம் உட்பட நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் ஜெயராமை ‘சரோஜா’ படத்தின் மூலம் வில்லனாக்கிய பெருமை இயக்குனர் வெங்கட்பிரபுவையே சேரும்.
பிரம்மானந்தம் வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதி. அதேபோல ‘சரோஜா’ படம் வெளியானபின் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் ஜெயராம். அப்படியானால் இதில் வில்லன் பார்த்திபனா? இல்லை ஜெயராமா?