சமீபத்தில் நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. இந்தவிழாவில் விஜய்,எ அஜித் போன்றவர்கள் கலந்துகொள்ளத குறையே தெரியாத அளவுக்கு ரஜினி, கமல் இருவரும் கலந்துகொண்டது விழாவை பிரமாண்டமாக்கியது.
குறிப்பாக இந்த நிகழ்வின்போது ரஜினியுடன் அருகில் இருந்து பேசி பழக அனைத்து நட்சத்திரங்களுக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அவரும் அனைத்து நட்சத்திரங்களிடம் வெகு இயல்பாக பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அந்தவகையில் நடிகை ஜனனி ஐயருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு ரொம்பவே சந்தோசம். இது அவரது நீண்டநாள் ஆசையும் கூட.