நிச்சயம் ஸ்டார் வேல்யூக்கள் உள்ள படங்களோடு இணைந்து ரிலீசாகும் தகுதிகள் அனைத்தும் கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ படத்துக்கும் உண்டு.. ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிறகு பருகுவதற்கு இன்னொரு வித்தியாமான பானமாக ‘இறைவி’ இருக்கும் என ரசிகர்கள் தனது எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதனால் தான் வரும் மார்ச்-24ல் இந்தப்படத்தை தைரியமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். பின்னே, கார்த்தியின் ‘தோழா’வும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’வும் அன்றைய தினம் தான் ரிலீஸாக இருக்கின்றனவாம்.. ஆக மும்முனை போட்டி பலமாகத்தான் இருக்கும் என்றே தெரிகிறது.