பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு நடித்துவரும் சில நடிகைகள் மத்தியில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் வேதிகா. கதையும் கதாபாத்திரமும் தனக்கு மன நிறைவை தந்தால் மட்டுமே அந்தப்படத்தில் நடிக்கவே சம்மதிக்கிறார் வேதிகா.
பாலாவின் ‘பரதேசி’க்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புள்ள கேரக்டர்களாகவே தேடி வருகின்றன.. ‘காவியத்தலைவன்’,தற்போது தமிழில் பிரபுதேவா ஸ்டுடியோஸின் விநோதன், மலையாளத்தில் ‘ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்’, கன்னடத்தில் ‘சிவலிங்கா’ என செலக்டிவாக, அதேசமயம் ஆக்டிவாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வேதிகா.. இன்று பிறந்தநாள் காணும், வேதிகாவுக்கு, நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது