தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 60வது பிறந்தநாளை எட்டியுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப் பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக தெலுங்கு சினிமாவில் வலம்வந்தவர்.
தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய 47 நாட்கள் படத்தில் அறிமுகமான சிரஞ்சீவி மேலும் ரஜினியுடன் ராணுவ வீரன், மாப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்கியதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார் சிரஞ்சீவி. அவர் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் அவரது மகன் ராம்சரண் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.
இருந்தாலும் மீண்டும் சினிமாவில் நுழையும் விதமாக தற்போது தனது 150வது படத்தில் நடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நமது Behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது