ஒரு நடிகராகவும் வெற்றிக்கொடி நாட்டிய சுந்தர்.சி, கடந்த இரண்டு வருடங்களாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு ‘கலகலப்பு’, ‘மதகஜராஜா’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களை இயக்கினார். அதில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் சுந்தர்.சி இந்தமுறை வெளிநபர்களின் டைரக்ஷனில் நடிக்காமல் ‘அரண்மனை’ படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சுந்தர்.சிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.