பேஸ்புக்கை வைத்து ஒரு சினிமா..!

கம்யூட்டரில் முதன்முதலில் சாட்டிங் என்கிற அம்சம் வந்தபோது அதை வைத்து ‘காதலர் தினம்’ என்கிற படத்தை உருவாக்கினார் இயக்குனர் கதிர். இப்போதோ ட்விட்டர், பேஸ்புக் யுகம்.. என்னடா இன்னும் இந்த ட்ரெண்டில் யாரும் படம் பண்ணவிலையே என நினைத்தால், இதோ செந்தில் நாதன் என்பவர் அப்படி ஒரு ரூட்டை பிடித்து வந்துவிட்டார். இவர் ஏற்கனவே ‘சிவி’ என்கிற படத்தை இயக்கியவர் தான்.

இவரது முந்தைய படத்தைப்போலவே இந்தப்படத்திற்கும் எப்.பி (FB) ஸ்டேட்டச போடு சாட் பண்ணு’ என கொஞ்சம் குழப்பமான பெயராகத்தான் வைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ஹீரோ சுரேஷ் சர்மா மலேசியாவை சேர்ந்தவர்.. கதாநாயகிகளில் ஒருவரான தேவிகா வால்மீகி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான்.

இந்தப்படத்தின் கதை பேஸ்புக் தான் என்பதால் வில்லனும் ஹீரோவும் பேஸ்புக் தான் என்கிறார் இயக்குனர். அப்படியானால் முழுக்க முழுக்க பேஸ்புக் பற்றிய படமாக இருந்தால் சாதராண ரசிகர்களுக்கு எப்படி புரியும் என்றால், இந்தப்படத்தின் கதையில் ஏற்படும் பிரச்சனைக்கு மூலகாரணம் பேஸ்புக் என்றும் பேஸ்புக்கில் தவறாக வழிநடத்தப்படுபவர்களை பற்றிய விழிப்புணர்வை இந்தப்படம் கொடுக்கும் என்கிறார்.. வரட்டும் பார்ப்போம்.

எப்.பி (FB) ஸ்டேட்டச போடு சாட் பண்ணுசுரேஷ் சர்மாதேவிகா