‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் மல்டிஸ்டாரர் படமாக உருவாக உள்ளது.. ஆம்.. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பஹத் பாசில் உள்ளிட்ட நான்கு ஹீரோக்களும், ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்களும் நடிக்க உள்ளனர்.
இன்று இந்த நட்சத்திரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வமான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இசைப்புயயல் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத் எடிட்டிங் என தனது ஆஸ்தான கூட்டணியுடன் தான் இந்தப்படத்தில் இறங்கியுள்ளார் மணிரத்னம்.