திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் ஏற்கனவே தமிழர் நலம் பேரியக்கம் என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.. இந்த அமைப்பு மூலமாக, புலம் பெயர்ந்து வந்து, இங்கு அகதிகளாக தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது கல்வி உதவி உட்பட பல உதவிகளை சத்தமில்லாமல் செய்துவருகிறார்.
தற்போது பெய்த அடைமழைக்கு கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாமும் தப்பவில்லை.. அங்கே நேரடியாக சென்ற இயக்குனர் மு.களஞ்சியம் அங்குள்ள மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு மேல் சப்பாத்தி தயார் செய்து கொடுத்து பலரது பசியையும் இவர் தணித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.