சைக்கலாஜிகல் லவ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘பியூட்டி’

ஆர்.தீபக் குமாரின் ஓம் ஜெயம் தியேட்டர் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘பியூட்டி’.

இலக்கியன் இசையில், வெ.இறையன்பு I.A.S அவர்கள் எழுதியுள்ள இரண்டு பாடல்களில் “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?!” என்ற பாடல், காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்… ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில், அழகு கொட்டிக்கிடக்கும் பூந்தோட்டங்களில் இந்தப் பாடல் மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

“பியூட்டி” என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது… சென்னையிலும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலுள்ள பூந்தோட்டங்களில் மட்டுமல்லாமல் அங்குள்ள இரயில்வே நிலையம், விதம்விதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள சில இடங்கள் என படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே ‘சைக்கலாஜிகல் லவ் த்ரில்’லராக, கார் – பைக் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் பரபரப்பான திரைக்கதையுடன் “பியூட்டி”யை படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார் பத்திரிகை துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இயக்குநர் கோ.ஆனந்த சிவா.

ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நடித்துள்ளா “பியூட்டி” படத்தை ஒளிப்பதிவுடன் தயாரிப்பாளராகவும் இருந்து ஆர்.தீபக் குமார் உருவாக்கியுள்ளார்.

beauty movieBollywoodcinema newsKollywood Newstamil movie beautyTollywood