“கூடுதல் பொறுப்பு என்மீது ஏறியிருக்கிறது” – நா.முத்துக்குமார் நெகிழ்ச்சி


தங்கமீன்கள் படத்தில் எழுதிய ஆன்ந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது நா.முத்துக்குமாருக்கு கிடைத்துள்ளது “இது இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார் நா.முத்துக்குமார்.

“தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நா.முத்துக்குமார்.

Director RamJSK Film CorporationJSK Sathish KumarNa MuthukumarSri Ram ParthasarathyYuvan Shankar Raja