திரைப்பட உலகில் பிரபலமான வசனகர்த்தாகாலில் ஒருவர் பிருந்தா சாரதி. தற்போது இவர் எழுதிய ‘எண்ணும் எழுத்தும் ‘ என்ற புதுக்கவிதை நூலுக்கு படைப்பு குழுமம் வழங்கும் 2017 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசு 9.9.18 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், பேராசிரியர் பி. மூ. மன்சூர் மற்றும் படைப்பு குழும நிர்வாகி முகம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.