பொதுவாக ஒரு ஹி படத்தின் கூட்டடணி அப்படியே அடுத்த படத்தில் தொடருமானால் முதல் படத்தைவிட எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். அப்படி ஜெயம் ரவி, ஹன்ஷிகாவை மீண்டும் ஒன்று சேர்த்து ‘போகன்’ படத்தை இயக்கும் இயக்குனர் லட்சுமண், இந்தக்கூட்டணியில் ‘தனி ஒருவன்’ அரவிந்த் சாமியையும் இணைத்ததால் அந்த எதிர்பார்ப்பு மும்மடங்காகி இருக்கிறது..
இந்தப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவருமே போலீஸ் தான்.. என்ன ஒன்று, இடைவேளைவரை ஹீரோவாக இருக்கும் ஜெயம் ரவி இடைவேளைக்குப்பின் வில்லனாக மாறுகிறாராம். வில்லனாக இருக்கும் அரவிந்தசாமியோ அப்படியே சேஞ்ச் ஆகிறாராம். சுருக்கமாக எல்லாவற்றையும் அனுபவிக்க துடிக்கும் கேரக்டர் ஜெயம் ரவிக்கு. எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த கேரக்டர் அரவிந்த்சாமிக்காம்.