‘கபாலி’யை மூன்றாவது முறை பார்க்க விரும்பும் சிரஞ்சீவி..!


சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ படம் ரசிகர்களை மட்டுமல்ல, இந்திய திரையுலக பிரபலங்கள் அனைவரையும் ஈர்த்துவிட்டது.. மொழி பாகுபாடு இல்லாமல் கபாளியில் ரஜினியின் மிரட்டலான நடிப்பை பார்த்து இளம் நடிகர்கள் ‘தலைவன்டா’ என ஆராதனை செய்ததெல்லாம் வரலாறு..

அவர்கள் தான் அப்படி என்றால் ஆந்திர சினிமாவின் மெகாஸ்டாரும், தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரிக்கு தயாராகி வருபவருமான சிரஞ்சீவி இதுவரை இரண்டுமுறை ‘கபாலி’ படத்தை பார்த்துவிட்டராம். ஒவ்வொருமுறை பார்க்கும்போது ரஜினி புதிதாகவே தெரிகிறாராம் சிரஞ்சீவிக்கு. அதனால் தற்போது மூன்றாவது முறையாகவும் படம் பார்க்க ஏற்பாடு செய்யச்சொல்லி இருக்கிறாராம் சிரஞ்சீவி.

Actor ChiranjeeviKabaliKalaipuli S DhanuRajiniRanjith