நடிகர்சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் கே.என்.காளை.. 84 வயதான இவர் இன்று மாரடைப்ப்பால உயிரிழந்தார். இவர் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
இதற்கு முன்பு இவர் நடித்த படங்களில் கூட இவரை அடையாளம் காண முடியாதவர்களிடம் கூட சமீபத்தில் வெளியான கிடாரி’ படம் இவரை நன்றாக அறிமுகமாக்கியது.. ஆம்.. கிடாரி படத்தில் சசிகுமாரின் குருவாக தன்னை காட்டிக்கொண்டு அதகளம் செய்வாரே ஒரு பெரியவர் அவர்தான் இந்த கே.என்.காளை..