மலேசிய மக்களை கவர்ந்த ‘பூச்சாண்டி’ – ’பூசாண்டி வரான்’ தலைப்பில் தமிழகத்தில் ரிலீஸாகிறது


ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள ’பூச்சாண்டி’ என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ’பூசாண்டி வரான்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் ’பூச்சாண்டி’ என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெ.கே.விக்கி எழுதி இயக்கியுள்ள  இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் ஜெ.கே.விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று படக்குழுநம்புகிறது.

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் திரையரங்குகளில் ’பூ சாண்டி வரான்’ படத்தை வெளியிடுகிறார்.

Kollywood Newsmovie newsMovie Reviewpoosandu varantamil cinema newstamil film poosandi varantamil movie poochandi